×

வத்திராயிருப்பு அருகே மலையில் குடியேறி மக்கள் 2வது நாளாக போராட்டம்

திருவில்லிபுத்தூர் : வத்திராயிருப்பு அருகே மலையில் குடியேறிய மலைவாழ் மக்கள் இரண்டாம் நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை ராம்நகர் மலைவாழ் மக்கள், ஆடி அமாவாசை திருவிழாவிற்கு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் கடை வைக்க அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பொருட்களை மலைப்பகுதியில் எடுக்க எந்த கெடுபிடியும் காட்டக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் உடைமைகளுடன் மலையில் குடியேறினர்.

நேற்று முன்தினம் மாலை மலைப்பகுதியில் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையிலும் தார்ப்பாய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி குத்துக்கல், பூலாம்பாறை மலைப்பகுதியிலேயே தங்கியிருந்தனர். இரண்டாம் நாளான நேற்றும் மலைப்பகுதியில் போராட்டம் தொடர்ந்தது. ராம்நகரில் தங்கியிருந்த எஞ்சியுள்ள மக்களும் போராட்டத்திற்கு சென்றதால், குடியிருப்பு பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

The post வத்திராயிருப்பு அருகே மலையில் குடியேறி மக்கள் 2வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Vathirairipu ,Thiruvilliputhur ,district ,
× RELATED வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி