×

மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டை குறிவைப்பது ஏன்?: பிரதமர் மோடிக்கு அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

சென்னை: மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டை குறிவைப்பது ஏன்? என்று ஒன்றிய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார். அரைவேக்காடுகள் – அமைச்சர்கள் போல பிரதமரும் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா? என்று அமைச்சர் சாடியுள்ளார். ஒன்றிய ஆளுந்தரப்பைச் சேர்ந்த அத்தனை பேரும் திமுகவையும் தமிழ்நாட்டையும் குறிவைத்துப் பேசியுள்ளனர். மணிப்பூரில் தங்கள் ஆட்சியின் நிர்வாக தோல்வியை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மணிப்பூர் மாநிலத்தை ஆட்சி செய்யும் பாஜக அரசு எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.

The post மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டை குறிவைப்பது ஏன்?: பிரதமர் மோடிக்கு அமைச்சர் எ.வ.வேலு கேள்வி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Tamil Nadu ,Minister AV Velu ,PM Modi ,Chennai ,Union Government ,Arivekkadus ,Tamil ,Nadu ,Minister AV ,Velu ,Modi ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...