×

நீடாமங்கலம் அருகே இளம்பெண் மர்மச்சாவு? தாய் புகாரால் பரபரப்பு

 

நீடாமங்கலம், ஆக.11: நீடாமங்கலம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அனுமந்தபுரம் கீழத் தெருவை சேர்ந்த துளசிராமன் (37). தற்போது இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வினோதா (28). இவர்களுக்கு 5 வயதில் ஆண், 3 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு திடீரென வினோதா தூக்கிட்டு இறந்துள்ளார். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே வினோதா சாவில் மர்மம் இருப்பதாக, அவரது தாய் செண்பகம் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வினோதா தூக்கிட்டு சாவதற்கு முன், மலேசியாவில் இருந்து அவரது கணவர் பேசியுள்ளார் என்ற விவரம் தெரியவந்தது. மேலும் வினோதா உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வினோதாவுக்கு திருமணம் செய்து 6 வருடம் 2மாதம் மட்டுமே ஆவதால், மன்னார்குடி கோட்டாட்சியர் கீர்த்தனாமணி விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நீடாமங்கலம் அருகே இளம்பெண் மர்மச்சாவு? தாய் புகாரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Marmachhau ,Needamangalam ,Nidamangalam ,Niedamangalam ,Marmachau ,
× RELATED புவி வெப்பமயமாதலை தடுக்க அதிக அளவில்...