×

வையம்பட்டி அருகே காஸ் சிலிண்டர் வெடித்ததில் கூரை வீடு எரிந்து சாம்பல்

 

துவரங்குறிச்சி, ஆக.11: வையம்பட்டி அருகே சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் கூரை வீடு தீப்பற்றியது. இதுகுறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பிச்சரட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45). இவரது மனைவி லட்சுமி (40). இவர்களது வீட்டின் பின்புறத்தில் கூரை வீட்டில் நேற்று இரவு 7 மணி அளவில் லெட்சுமி சமையல் செய்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக காஸ் சிலிண்டர் தீபற்றி வெடித்ததில் கூரை வீடு தீப்பற்றி முற்றிலும் எரிந்தது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக தீக்காயம் மற்றும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வையம்பட்டி அருகே காஸ் சிலிண்டர் வெடித்ததில் கூரை வீடு எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.

Tags : Vaiyampatti ,Duvarankurichi ,Dinakaran ,
× RELATED துவரங்குறிச்சி பகுதியில் காட்டு...