- வெட்டமங்கலம்
- Velayuthampalayam
- குளத்துப்பாளையம், காளிபாளையம்
- நொய்யல் கால்நடை மருத்துவமனை
- கரூர்
- தின மலர்
வேலாயுதம்பாளையம், ஆக. 11: கரூர் மாவட்டம், நொய்யல் கால்நடை மருத்துவமனை சார்பில் குளத்துப்பாளையம், காளிபாளையம் பகுதிகளில் கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பாஸ்கர் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல உதவி இயக்குநர் அல்லி அருள்குமாரி முன்னிலை வகித்தார். நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் உஷா தலைமையில் உதவியாளர் மாலதி கொண்ட குழுவினர், சுமார் 200க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி செலுத்தினர். அதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், கால்நடைகளுக்கு புரத சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
The post வேட்டமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.