×

திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்கள் குருபூஜை விழா

திருப்புத்தூர், ஆக.11: திருப்புத்தூர் சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதர், யோகா பைரவர் கோயிலில் 63 நாயன்மார்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், மற்றும் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களின் குருபூஜை விழாவை முன்னிட்டுஅப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் உற்சவர்களுக்கும் மற்றும் 63 நாயன்மார்கள் மூலவர்களுக்கும் காலை 10 மணிக்கு யாக வேள்வியுடன் ஆரம்பித்தது.

பகல் 11 மணிக்கு பூர்ணாகுதியும் நடந்தது. பகல் 12 மணியளவில் பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. குருபூஜை விழாவில் யாகம் மற்றும் பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். பின்னர் கோயில் உட்பிரகாரத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பல்லக்கில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்கள் குருபூஜை விழா appeared first on Dinakaran.

Tags : 63 ,Nayanmars Gurupuja ceremony ,Thiruthalinathar Temple ,Tiruputhur ,Sivakami ,Thirutalinathar ,Yoga Bhairava Temple ,Tiruputlur Temple ,
× RELATED ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு