×

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கம்பம், ஆக. 11: கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேச்சி அம்மன் கோயில் தெரு கேட்பாரற்று 24 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பதாக உத்தமபாளையம் குடிமை பொருள் பதுக்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உத்தமபாளையம் ஃபுட் செல் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவப்பிரகாசம், பொன் .குணசேகரன் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு கிடந்த 24 மூட்டை ரேஷன் அரிசியையும் , சந்தேகப்படும்படியாக நின்றிருந்த டூவீலரையும் கைப்பற்றி விசாரணை செய்தனர். விசாரணையில், புதுப்பட்டியை சேர்ந்த பிரபு, விருமாண்டி ஆகிய இருவர் மீதும் புட்செல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட சுமார் 1 டன் ரேஷன் அரிசியை உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

The post ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kambam ,Pudupatti Pachi Amman Koil Street ,Kambam Ration ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால்...