×

நெமிலிச்சேரி பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஆவடி, ஆக. 11: நெமிலிச்சேரி பகுதியில் 2 புதிய சாலை அமைக்கும் பணிகளை ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். நெமிலிச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல வருடங்களாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் முதல்வன் கிராம சாலை திட்டத்தின் கீழ் ₹84.29 லட்சம் மதிப்பீட்டில் 2 சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்தன. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக நடுக்குத்தகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிடிஎஸ் சாலை முதல் மூவேந்தர் நகர் வரை ₹32.67 லட்சம் மதிப்பீட்டில் 2 சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ சா.மு.நாசர் நேற்று பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஹவுஸ் மற்றும் திருநின்றவூர் முழு நேர கிளை அலுவலக வாசகர்கள் சார்பில் நடந்த புத்தகக் கண்காட்சியை அவர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், செயற்குழு உறுப்பினர் நடுக்குத்தகை ரமேஷ், திருநின்றவூர் திமுக நகரச் செயலாளர் தி.வை.ரவி, நகரமன்றத் தலைவர் உஷாராணி, துணை நகரச் செயலாளர் நாகராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார், 6வது வார்டு நகரமன்ற உறுப்பினர் யோகா தேவி, நடுக்குத்தகை கவுன்சிலர் யமுனா ரமேஷ், நடுக்குத்தகை ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி, துணைத் தலைவர் செந்தாமரை, நெமிலிச்சேரி ஊராட்சி கவுன்சிலர் சுரேஷ்குமார், மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் வாசுகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நெமிலிச்சேரி பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Nemilicherry ,MLA ,Avadi ,S.M. Nasser Adikkal ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...