×

லஞ்ச புகாரில் சிக்கிய அமைச்சருக்கு எதிராக கியூஆர் கோடு போஸ்டர்

மண்டியா: கர்நாடக வேளாண் துறை அமைச்சர் செலுவராயசாமி மீது மண்டியா வேளாண் துறை அதிகாரிகள் லஞ்ச புகார் கொடுத்ததையடுத்து அவருக்கு பணம் கொடுங்கள் என்று கியூஆர் கோடுடன் போஸ்டர்களை பாஜவினர் ஒட்டியுள்ளனர். கர்நாடக மாநில வேளாண் துறை அமைச்சர் செலுவராயசாமி, பணியிட மாற்றங்களுக்கு தலா ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை லஞ்சம் கேட்பதாக மண்டியா மாவட்ட வேளாண் துறை உதவி இயக்குநர்கள் 7 பேர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு புகார் கடிதம் அனுப்பினர்.

இது குறித்து சிஐடி விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்த போது செய்த போராட்ட பாணியிலேயே அமைச்சர் செலுவராயசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டி பாஜவினர் எதிர்ப்பு பிரசாரம் செய்து வருகின்றது. செலுவராயசாமிக்கு பணம் செலுத்துங்கள் என்று ’பேசிஎஸ்’ என்ற கியூஆர் கோட் உடன் போஸ்டர் அடித்து மண்டியா முழுவதும் ஒட்டப்பட்டது.

அமைச்சர் செலுவராயசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரில், ’பே சிஎஸ்’ ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வரவேற்கப்படுகிறது. இந்த கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து செலுவராயசாமிக்கு பணம் அனுப்புங்கள். எந்த பணப்பரிவர்த்தனையாக இருந்தாலும், ’பே சிஎஸ்‘ பண்ணுங்க என்று எழுதப்பட்டிருந்தது. செலுவராயசாமிக்கு எதிரான இந்த போஸ்டர்களை அகற்றிய மண்டியா போலீசார், பாஜவினர் சிலரை கைது செய்தனர்.

The post லஞ்ச புகாரில் சிக்கிய அமைச்சருக்கு எதிராக கியூஆர் கோடு போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : Mandia ,Karnataka ,Agriculture ,Minister ,Seluvarayasamy ,Mandia Agriculture Department ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...