×

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ‘ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்’ தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என அறிக்கை அளித்து 16 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட ஒன்றிய அரசாங்கம் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல்வர் ‘கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ஆதிதிராவிட மக்களை எஸ்சி பட்டியலில் சேர்த்து அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும்’ என தனித் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீதான நடவடிக்கைகள் இன்னும் ஒன்றிய அரசால் எடுக்கப்படவில்லை. கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களை தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பதாகும்.

The post தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dalit Christians ,S.C. ,Thirumavalavan ,CHENNAI ,President of ,Vishik ,Ranganath Mishra Commission ,Union Government ,SC ,
× RELATED கல்குவாரிகளை ஆய்வு செய்து கண்காணிக்க...