×

இன்ஸ்டாகிராம் காதலனை கரம்பிடித்த சிறுமி கொலை?

பல்லடம்: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாஷ். சமையல் மாஸ்டர். இவரது மகள் நந்தினி (16)க்கும், திருப்பூர் அருகே கரைப்புதூரை சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். கடந்த 4 மாதத்திற்கு முன் நந்தினி மாயமானார். போலீசார் விசாரணையில் நந்தினி இன்ஸ்டாகிராம் காதலரை திருமணம் செய்து பல்லடம் கணபதி பாளையத்தில் வசித்தது தெரியவந்தது. அந்த வாலிபருக்கு மது பழக்கம் இருந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று காலை நந்தினி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

The post இன்ஸ்டாகிராம் காதலனை கரம்பிடித்த சிறுமி கொலை? appeared first on Dinakaran.

Tags : Palladam ,Sivaprakash ,Kalaiyar temple ,Sivagangai district ,Nandini ,Tirupur ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது