×

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் கடத்தல்: பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்த இருளர் இனத்தை சேர்ந்த காமாட்சி (28) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 7ம் தேதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்றுமுன்தினம் காமாட்சிக்கு சுக பிரசவம் ஆன நிலையில், அவரது கணவர் மூர்த்தி, மகன்கள் சக்திவேல், குள்ளமா, மகள் சௌந்தர்யா ஆகியோர் மகப்பேறு நலப்பிரிவு அருகே அமர்ந்திருந்தனர்.

அந்த சமயத்தில் அங்குவந்த ஒரு பெண், மூர்த்தியிடம் அன்பாக பேசி மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது சக்திவேல், சௌந்தர்யா ஆகியோருடன் அந்த பெண் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி, மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது குழந்தைகளை காணவில்லை என புகார் தெரிவித்தனர். இதன்படி விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன், காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் ஆகியோர் வந்து மூர்த்தியிடம் விசாரித்தனர். மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் கடத்தல்: பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,government hospital ,Kamatshi ,Venkacheri ,Kanchipuram district ,Kanchipuram Government Hospital ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...