×

உட்கட்சி தேர்தலில் அதிருப்தி: தேமுதிக மாஜி நிர்வாகி புது கட்சி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தேமுதிக முன்னாள் செயலாளர் பூட்டுத்தாக்கு நித்யா. இவர் அக்கட்சியிலிருந்து விலகியிருந்தார். இன்று அவர் புதிதாக தேசிய திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இதற்கான கட்சிக்கொடியை ராணிப்பேட்டை சிப்காட் பாரதிநகரில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் அறிமுகம் செய்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தேமுதிக உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் நான் சிபாரிசு செய்த தேமுதிக தொண்டர்கள் ஒருவருக்கு கூட பதவி வழங்கவில்லை. மேலும் நிர்வாகிகளை எந்த முறையில் அறிவித்தார்கள் என தெரியவில்லை. கட்சி நிர்வாகிகளை கலந்தாலோசித்து நிர்வாகிகளை தேர்வு செய்யவில்லை. நிர்வாகிகள் பதவி தொடர்பாக அதிருப்தி ஏற்பட்டதால் தேமுதிகவில் இருந்து விலகி தேசிய திராவிட கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளேன். அதற்கான கொடியையும் அறிமுகம் செய்துள்ளேன் என்றார்.

The post உட்கட்சி தேர்தலில் அதிருப்தி: தேமுதிக மாஜி நிர்வாகி புது கட்சி appeared first on Dinakaran.

Tags : DMDK ,Ranipet ,Ranipet East District ,Bhututhakku Nithya ,DMD ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...