×

கோவையில் முஸ்தாக் அகமது என்பவரை அடித்துக் கொன்ற வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது

கோவை: கோவையில் முஸ்தாக் அகமது என்பவரை அடித்துக் கொன்ற வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்தாக் அகமது கொலை வழக்கில் ராகுல், இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் மணிகண்ட மூர்த்தி, மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். ராகுலின் மனைவி தனது குழந்தைக்கு பாலூட்டுவதை முஸ்தாக் அகமது பார்த்ததாக சந்தேகப்பட்டு தாக்குதல் நடந்துள்ளது. முஸ்தாக் அகமது வீட்டுக்கு நேரில் சென்று தகராறு செய்து அவரை ராகுல் தாக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவையில் முஸ்தாக் அகமது என்பவரை அடித்துக் கொன்ற வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Hindu People's Party ,Coimbatore ,Mushtaq Ahmed ,
× RELATED கலவரத்தால்தான் பாஜ காலூன்ற முடியும்...