×

இணைய வசதிக்கான உபகரணங்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

விருதுநகர், ஆக.10: பாரத்நெட் திட்டம் மூலம் அனைத்து கிராமங்கள் தோறும் அதிவேக இணைய வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உபகரணங்களை சேதப்படுத்தும் மற்றும் திருடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழைவலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது, 85% மின்கம்பங்கள் மூலமாகவும் 15% தரைவழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவைமையம் அல்லது அரசுகட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதிசெய்திடவும், POP பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தால் உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியிலும் POP மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யு.பி.எஸ், ரூட்டர், ரேக் மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடமைகளாகும். மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

The post இணைய வசதிக்கான உபகரணங்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Bharatnet ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...