×

ராஜபாளையம் அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியில் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ சந்தன முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா மற்றும் பூக்குழி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் அம்மனுக்கு பால், பன்னீர், தேன் போன்ற 16 வகை அபிஷேகங்கள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பால்குடம் ஊர்வலம், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் விழா இன்று அதிகாலை 7 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று, முளைப்பாரி கரகம் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் சுப்புராம், செயலாளர் கண்ணன், பொருளாளர் மணிகண்டன் மற்றும் கோயில் திருவிழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post ராஜபாளையம் அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Rajapalayam Amman Temple Flowers Festival ,Rajapalayam ,Virudunagar District ,Rajapalayam ESI Colony ,Arulmigu Sri Sandana Muthumariamman Thirukoil ,Ikhoil ,Rajapalayam Flowerpot Festival ,Amman Temple ,
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து