×

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டம் ஓராண்டில் நிறைவேற வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

திருவெறும்பூர்: திருச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நேற்று அளித்த பேட்டி: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவுக்கு செல்வதற்காக இந்தியாவை நாடியுள்ளது. சந்திரயான்-3 பூமியை தாண்டி நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்துள்ளது. தற்போது முக்கியமான கட்டத்தை தாண்டி நிலவின் நீள்வட்ட பாதையில் நிலை நிறுத்தியுள்ளனர். பாகங்கள் பிரிக்கப்பட்டு விக்ரம் லாண்டர் பிரிந்து வருகிற 23ம் தேதி நிலவின் தரையை தொடும்.

அதைதொடர்ந்து சந்திரயான் விண்கலம் தானாக நிலவுக்கு தகுந்தாற்போல் வேகத்தில் செல்லும். அப்போது நிலவில் உள்ள மண்ணின் தன்மை, வெப்பநிலையை ஆய்வு செய்யும். தற்போது சந்திரயான்- 3 நிலவின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய கால்தட படத்தை அமெரிக்கா எடுத்ததுபோல் இந்தியாவின் விக்ரம் லாண்டரின் சக்கர தடத்தை நாம் பார்ப்பதற்கான சாத்தியம் உள்ளது.

அமெரிக்காவின் நாசா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடிவெடுத்துள்ளது. அந்த திட்டத்தில் சர்வதேச அளவில் மற்ற நாடுகள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். ஏனென்றால் அந்த திட்டம் மிகப்பெரிய திட்டம். மனிதர்கள் அங்கு வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும், அங்கு சர்வதேச விண்வெளி மையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது அந்த திட்டத்தில் இந்தியா இணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா திட்டம் முன்னெடுப்பில் உள்ளது. ஓராண்டில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

The post சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டம் ஓராண்டில் நிறைவேற வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல் appeared first on Dinakaran.

Tags : Mayilsami Annadurai ,Thiruvedumpur ,ISRO ,Trichy ,NASA Space Research Centre ,USA ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...