×

கைது செய்யப்படுவீர்கள் என்று என்னை அமைச்சர் ஸ்மிருதி ராணி அச்சுறுத்துவதாக திமுக உறுப்பினர் ஆ.ராசா குற்றச்சாட்டு

டெல்லி: கைது செய்யப்படுவீர்கள் என்று என்னை அமைச்சர் ஸ்மிருதி ராணி அச்சுறுத்துவதாக திமுக உறுப்பினர் ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றம் தங்களது கட்டுபாட்டில் இருக்கிறது என்று அமைச்சர் கூறுகிறாரா? என மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா கேள்வியெழுப்பினார்.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதும் அவரை குறுக்கிட்டு ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசினார்.

ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திமுக உறுப்பினர் ஆ.ராசா, கைது செய்யப்படுவீர்கள் என்று என்னை அமைச்சர் ஸ்மிருதி ராணி அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நமது நாட்டின் நீதிமன்றங்களை பாஜக அரசு கட்டுபடுத்தி வைத்திருகிறதா? என்று ஸ்மிருதி ராணி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவைக்கு தலைமையேற்று நடத்திய ராஜேந்திர அகர்வாலிடம் ஆ.ராசா கேள்வியெழுப்பினார்.

The post கைது செய்யப்படுவீர்கள் என்று என்னை அமைச்சர் ஸ்மிருதி ராணி அச்சுறுத்துவதாக திமுக உறுப்பினர் ஆ.ராசா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : DMK ,A. Raza ,Minister ,Smriti Rani ,Delhi ,Minister Smriti Rani ,Supreme Court ,Dinakaran ,
× RELATED பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து...