×

பாஜகவினர் தேச துரோகிகள்; மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்கு சமம்: ராகுல் காந்தி ஆவேசம்

டெல்லி: மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்கு சமம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று 2-ம் நாளாக விவாதம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சார்பில் விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய ராகுல் காந்தி; பேச்சை தொடங்கியவுடனேயே அதானியின் பெயரை குறிப்பிட்டார் ராகுல் காந்தி; பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய அவர்; நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை, நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.

மணிப்பூர் பற்றியே பேசுவேன்; அதானி பற்றி பேசமாட்டேன், பாஜகவினர் பயப்பட வேண்டாம். பா.ஜ.க. ஆட்சியால் நான் 10 ஆண்டுகளாக அவதூறுகளுக்கும் சிறுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறேன். பிரதமர் மோடி விரும்பினால் சிறைக்குச் செல்ல தயார். இந்திய ஒற்றுமைப் பயணத்துக்காக எதையும் தியாகம் செய்ய தயார். மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் செல்லவில்லை; ஏனென்றால் அவர் மணிப்பூர் இந்தியாவில் இல்லை என நினைக்கிறார். மக்களின் துக்கமே எனது துக்கம்… அவர்களின் வலியே எனது வலி; நாட்டு மக்களின் வலியை பிரதமர் உணர வேண்டும்.

மணிப்பூரை ஒன்றிய அரசு இரண்டாக பிரித்து விட்டது. மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்கு சமம். மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டதாக ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பா.ஜ.க. அமைச்சர் குறுக்கிட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிரண் ரிஜிஜு – குறுக்கீட்டிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்ந்து உரையாற்றிய ராகுல் மணிப்பூர் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் என பல தரப்பினரும் என்னிடம் குமுறினார்கள். பாஜக அரசு இந்தியா என்ற கருத்தோட்டத்தையும் பாரம்பரியத்தையும் அழித்துவிட்டது. சமத்துவம், மத நல்லிணக்கம், சகோதரத்துவம்தான் இந்தியாவின் கருத்தோட்டம் என்று ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். மணிப்பூரில் பாரத மாதாவையே பாஜக அரசு கொன்றுவிட்டது. பாரத மாதாவை பாதுகாப்பதற்கு பதிலாக, பாரத மாதாவை பா.ஜ.க. அரசு கொன்றுவிட்டது. பாஜகவினர் தேச துரோகிகள் என்று ராகுல் காந்தி ஆவேச பேசினார்.

 

The post பாஜகவினர் தேச துரோகிகள்; மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்கு சமம்: ராகுல் காந்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,India ,Rahul Gandhi ,Delhi ,Modi ,Pajakavini Nationals ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...