×

சுரண்டை அருகே காட்டு பகுதியில் 30 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

சுரண்டை,ஆக.9: சுரண்டை அருகே காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்த முயன்ற 30 மூடை ரேஷன் அரிசியை சேர்ந்தமரம் போலீசார் பறிமுதல் செய்தனர். சுரண்டை அடுத்துள்ள சேர்ந்தமரம் அருகில் உள்ள கோவிலாண்டனுர் காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கோவிலாண்டனுர் காட்டுப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள முட்புதார் பகுதியில் 30 மூடை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்தது கோவிலாண்டனுர் மேலத்தேருவை சேர்ந்த சார்லஸ் மகன் திவாகர் (30) என்பதும் அவர், இதனை கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து திவாகரை கைது செய்த போலீசார், ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர்.

The post சுரண்டை அருகே காட்டு பகுதியில் 30 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Surandai ,Dinakaran ,
× RELATED சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி