×

சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் கைது

 

பழநி, ஆக. 9: பழநி அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று 7 வயது சிறுமியை முட்புதருக்குள் தூக்கி சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் முருகன் தப்பியோடினார். பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து பழநி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முள்புதரில் மயக்கமடைந்து கிடந்த சிறுமியை மீட்டு, பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

The post சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Chilmisham POCSO ,Palani ,Murugan ,Dinakaran ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை