×

வாகனம்-பைக் மீது மோதி பெண் பலி

 

மேட்டுப்பாளையம், ஆக.9: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சேர்ந்தவர் கமல்ராஜ்(40). இவர் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் இவருக்கு கீதா(37) என்ற மனைவியும், கரிஷ்மா(14) என்ற மகளும், அகில்குமார் (8) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் நிறுவனத்தின் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். குழந்தைகள் இருவரும் வெள்ளியங்காடு அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். இருவரும் வழக்கமாக பள்ளிப்பேருந்து மூலமாகவே பள்ளிக்கு சென்று வந்துள்ளனர். மேலும், சிறுமிக்கு சிறப்பு வகுப்பு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமியை அழைக்க கீதா தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளி நோக்கி சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக்கின் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த கீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தினை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வாகனம்-பைக் மீது மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Kamalraj ,Udumalaipet ,Tirupur district ,Mettupalayam Vanabhatrakaliamman ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...