- கைப்பந்து போட்டி
- அழகர் கோவில்
- அழகர்கோயில்
- மேலூர் கல்வி மாவட்ட குரு வாத்தா பள்ளி
- சுந்தராசா அரசு உயர்நிலைப் பள்ளி
- ஆலகார்கோயில் கைப்பந்தாட்டப் போட்டித் தொடர்
- தின மலர்
அழகர்கோவில், ஆக.9: அழகர்கோவில் சுந்தரராசா அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் மேலூர் கல்வி மாவட்டம் குறு வட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில், 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட , மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட வாலிபால் போட்டிகள் நேற்று நடைபெற்றது. போட்டியை அழகர்கோவில் துணை ஆணையர் ராமசாமி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் செல்வராஜ், வரவேற்றார். முதலில் அழகர்கோவில் சுந்தரராசா பள்ளி பெண்கள் அணி மற்றும் தெற்கு தெரு பள்ளியை சேர்ந்த பெண்கள் அணியினர் விளையாடினார்.
இதில் அழகர்கோவில் சுந்தரராசா பள்ளி வெற்றி பெற்றது. மேலும் மேலூர், திருவாதவூர்,ஜாஸ் மெட்ரிக் பள்ளி, உள்ளிட்ட 23 அரசு மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்,மாணவிகள் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டி துவக்க நிகழ்ச்சியில் அ.வலையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபாதங்கம், பேரூராட்சி சேர்மன் குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post அழகர்கோவிலில் வாலிபால் விளையாட்டு போட்டி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு appeared first on Dinakaran.