சிவகாசி, ஆக.9: தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு சிவகாசி பெண்கள் கல்லூரியில் பேஷன் ஷோ நடைபெற்றது. சிவகாசி எஸ்எப்ஆர் பெண்கள் கல்லூரியில் தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பெரிய தாய் தலைமை வகித்தார். கல்லூரி வளாகத்தில் பெண்களுக்கான கைத்தறி உடைகள், சிறுவர்களுக்கான கைத்தறி உடைகள் கண்காட்சி நடைபெற்றது.
கைத்தறி தின விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் அனைவரும் கைத்தறியிலான உடைகளை அணிந்து கல்லூரிக்கு வந்திருந்தனர். பின்னர் நடைபெற்ற பேஷன் ஷோவில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விதவிதமான கைத்தறி உடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து போஸ் கொடுத்தனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
The post தேசிய கைத்தறி தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.