×

கதீட்ரல் சாலையில் 114 கிரவுண்ட் நிலத்தை தோட்டக்கலை சங்கத்திடமிருந்து மீட்டதை எதிர்த்து வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஐகோர்ட்டின் உத்தரவுபடி, சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள 4 காணி, 18 கிரவுண்ட், 1683 சதுர அடி நிலத்தை தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து அரசு கைப்பற்றியது. இதை எதிர்து தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி யானது. இந்த உத்தரவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வக்கீல்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக புகார்தாரர் தரப்பில், ஊழல் அதிகாரி ஒருவர், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்துக்கு தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், புகார்தாரருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக். 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post கதீட்ரல் சாலையில் 114 கிரவுண்ட் நிலத்தை தோட்டக்கலை சங்கத்திடமிருந்து மீட்டதை எதிர்த்து வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Cathedral Road ,Horticulture Union ,Government of Tamil Nadu ,iCort ,Chennai ,Lands ,Chennai Cathedral Road ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...