×

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன் சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் வர பாதுகாப்பு கோரி மனு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பதற்காக, திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை சென்றுவர காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முருகன் சார்பில் அவரது மனைவி நளினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சர்வதேச பாஸ்போர்ட்டை பெற சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு செல்வதற்காக சிறப்பு முகாமில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். அங்கு சென்று வர எனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசுக்கும், வெளிநாட்டினர் பதிவு மண்டல அலுவலருக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க வேண்டுமா அல்லது தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா என தலைமை நீதிபதியின் உத்தரவை பெறும்படி, நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

The post ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன் சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் வர பாதுகாப்பு கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Murugan ,Chennai ,Rajiv Gandhi ,Murugan Chennai Passport Office ,Dinakaraan ,
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...