×

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே பல்லவன் அதி விரைவு ரயில் திடீரென நிறுத்தம்

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாழநல்லூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கு அருகே சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக ரயில்வே ட்ராக் செல்கிறது. மேற்படி ஏரியில் காய்ந்த விழல் மர்மமான முறையில் ரயில்வே டிராக்கிற்கு அருகே எரிந்ததனால் 19.15 மணியளவில் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வழியாக திருச்சி செல்லும் ஹச்குடா ரயிலும் மற்றும் 19.45 மணி அளவில் சென்னையிலிருந்து காரைக்குடி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தாழநல்லூர் ரயில்வே நிறுத்தத்திலேயே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் முன்பாகவே நிறுத்தப்பட்டது. பின்னர் தாமதமாக 21.05 மணி வரை தீ அணைந்ததும் ரயில்கள் புறப்பட்டு சென்றது.

The post கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே பல்லவன் அதி விரைவு ரயில் திடீரென நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Sudden ,Pallavan ,Pennadam, Cuddalore District ,Cuddalore ,Daznallur ,Pendanadam Police Station ,Cuddalore District ,Pennadam ,Dinakaran ,
× RELATED பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல்...