×

நெல்லை ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நெல்லை ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யபட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை – திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மற்றும் திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இரண்டும் நாளை முழுமையாக ரத்து செய்யபடுவதாக தெரிவிக்கபட்டுள்ளது. தாம்பரம் – நாகர்கோவில் செல்லும் அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் இன்று தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவில் – தாம்பரம் அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் நாளை நாகர்கோவிலுக்கு பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும் எனவும், பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயில் நாளை கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் நாளை திருச்செந்தூருக்கு பதில் கோவில்பட்டியிலே இருந்து புறப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

நெல்லை – திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் நாளை மாலை 4.15 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post நெல்லை ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Paddy Railway Yard ,Chennai ,Nella Railway Yard ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...