×

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

* ராணிப்பேட்டை

ஆடி கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. ராணிபேட்டையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் ச.வளர்மதி உத்தரவு அளித்துள்ளார். ஆடி கிருத்திகையை முன்னிட்டு இரத்தினகிரி, திருத்தணி முருகன் கோயில்களுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இரத்தினகிரி மலையின் மீது பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முருகன் இரு கோலங்களில் காட்சி தருகிறார். ஒன்று வள்ளி தெய்வானையுடன் உள்ள திருக்குாலம் மற்றொன்று குருகோலம் ஆகும். கிரானைட் கற்கலால் அமைக்கப்பட்ட தேரின் மீது சிலை நிறுவப்பட்டுள்ளது. சோழர்கால சிற்பக்கலை வடிவில் கற்பக்கிரகம் கிரானைட் கற்கலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக வரும் 12ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* திருவள்ளுர்

திருத்தணியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என்று ஆட்சியர் அறிவிப்பு தெரிவித்துள்ளார். நாளைய உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆக.26ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடிக் கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று தொடங்கியது. விழாவின் முக்கிய திருவிழாவான ஆடிக்கிருத்திகை வரும் 9-ம் தேதி நடக்கிறது. அன்று இரவு தெப்பத் திருவிழாவும், 10-ம் தேதி 2-ம் நாள் தெப்பத் திருவிழாவும், 11-ம் தேதி 3-ம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளன.

The post ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Ranipettai ,Audi ,Krittikai ,Ranipet ,Krithikai ,Audi Krittikai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...