×

காரமடை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

காரமடை, ஆக.8: காரமடை அடுத்துள்ள கண்டியூரை சேர்ந்தவர் பசுபதி (50). இவரது மனைவி சரிதா(45). இவர்களுக்கு 2 மகன்கள். இவர்கள் கணுவாய்பாளையத்தில் உள்ள கிருஷ்ணசாமி தோட்டத்தில் தங்கி கூலி வேலை ெசய்தனர். மூத்த மகன் சபரீஷ் (19). இதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் லோடுமேனாக இருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சபரீஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த குடும்பத்தினர் வந்து பார்த்தபோது தூக்கில் சபரீஷ் சடலமாக தொங்கினார். இது குறித்து காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post காரமடை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Karamadai ,Kandiyur ,Sarita ,
× RELATED காரமடை மலையில் தீ விபத்து: 52 வீடுகள் எரிந்து நாசம்