×

திருச்சி முகாம் சிறையில் 4 கைதிகள் திடீர் உண்ணாவிரதம்

திருச்சி, ஆக.8: திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த தமிழர்கள் 4 பேர் தங்களை விடுவிக்ககோரி நேற்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரரபப்பு ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள முகாம் சிறையில் பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டினர் உள்ளனர். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த தமிழர்களான முரளிதரன்(28), இளங்கோ(34), லாவசந்தன்(34), புஷ்பராஜ்(43) ஆகியோர் தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக்கோரி நேற்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி முகாம் சிறையில் 4 கைதிகள் திடீர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Trichy Camp Jails ,Trichy ,Tamils ,Trichy Camp ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...