×

மண்ணச்சநல்லூர் அருகே பாம்பு கடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு

சமயபுரம், ஆக.8: மண்ணச்சநல்லூர் அருகே பாம்பு கடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலியானார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பூனாம்பாளையம் அருகே உள்ள சுப்பாய்பண்ணை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (48) விவசாயி. இவர் கடந்த கடந்த 1 ம் தேதி தனது தோட்டத்தில் கத்திரிக்காய் பறித்து கொண்டிருந்த போது வயல் வயலில் கிடந்த பாம்பை மிதித்துள்ளார். அப்போது பாம்பு அவரின் காலில் கடித்துள்ளது. பின்னர் அவர் மயங்கி வயலில் விழுந்து கிடந்ததை கண்டு அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் முருகேசன் ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முருகேசன் மனைவி பிச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மண்ணச்சநல்லூர் அருகே பாம்பு கடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு appeared first on Dinakaran.

Tags : Mannachanallur ,Samayapuram ,Poonampalayam, Trichy district ,
× RELATED மண்ணச்சநல்லூரில் ரூ.38 லட்சம் செலவில்...