×

பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஆக.8: கல்லணை அருகே பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை நோக்கி சென்ற தனியார் பேருந்தை செய்யாமங்கலம் பகுதியில் லட்சுமணன் மகன் சஞ்சீவி (34) என்பவர் வழி மறித்து தகராறு செய்துள்ளார். அப்போது அவர் பஸ் கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து தோகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சீவியை தேடி வந்தனர். இந்நிலையில் அவரை நேற்று கைது செய்து திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

The post பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukkatupalli ,Kallanai ,Dinakaran ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு