×

தஞ்சாவூர் கொலை வழக்குகளில் தொடர்பு 2 வாலிபர்கள் குண்டாசில் கைது

தஞ்சாவூர், ஆக. 8: கொலை வழக்கில் தொடர்புடைய தஞ்சையை சேர்ந்த 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், மணக்கால், இந்திரா நகர், மேலத்தெருவை சேர்ந்தவர் மதன் (எ) மதிநேசன் (25). தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கூட்டம், அம்மாப்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாபு (எ) ஆனந்த பாபு. (30). இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர்கள் தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் எஸ்பி ஆஷிஸ் ராவத் பரிந்துரையின் பேரிலும், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையிலும் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு திருச்சி சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது. கேளாத மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் விக்னேஸ்வரன், தலைவர் இளஞ்செழியன் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

The post தஞ்சாவூர் கொலை வழக்குகளில் தொடர்பு 2 வாலிபர்கள் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kundazi ,Tanjore ,Goondasil ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...