×

கிணற்றில் விழுந்த புனுகுப்பூனை மீட்பு

கெங்கவல்லி, ஆக.8: வீரகனூர் அருகே, லத்துவாடி கோபாலபுரம் கிராமத்தில் தனியார் விவசாய தோட்டத்து கிணற்றில் அரிய வகை புனுகுப்பூனை ஒன்று தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், வனச்சரகர் சிவக்குமார் தலைமையில், வனவர் வெங்கடேசன், வனக்கப்பாளர்கள் பச்சமுத்து, பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று புனுகுப்பூனை உயிருடன் மீட்டனர். அப்போது, அந்த பூனை கடித்ததில் வனவர் வெங்கடேசனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. மீட்கப்பட்ட புனுகுப்பூனை அருகில் உள்ள வனத்தில் பாதுகாப்பாக விடப்பட்டது.

The post கிணற்றில் விழுந்த புனுகுப்பூனை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Lathuvadi Gopalapuram ,Weerakanur ,
× RELATED இருதரப்பு மோதலில் 2 வாலிபர்கள் கைது