×

ஆசிரியர்களுக்கு பணி திறன் மேம்பாட்டு பயிற்சி

எலச்சிபாளையம், ஆக. 8: எலச்சிபாளையத்தில், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட வேலகவுண்டம்பட்டி, பெரியமணலி, மாணிக்கம்பாளையம், உலகப்பம்பாளையம், எலச்சிபாளையம் உள்ளிட்ட அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி, வகுப்பறை மேலாண்மை மற்றும் அதில் பெற்றோர்களின் பங்கு குறித்து கருத்தாளர்களால் பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட ஆசிரியர், பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சந்தோஷம், வட்டார கல்வி அலுவலர்கள் ராஜவேல், வெங்கடாசலம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வேலகவுண்டம்பட்டி, பெரியமணலி குறுவள மையங்களை பார்வையிட்டு கருத்துக்களை வழங்கினார். இப்பயிற்சியில் 143 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆசிரியர்களுக்கு பணி திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Elachipalayam ,Dinakaran ,
× RELATED முதியவர் சாவில் மர்மம்