வேலாயுதம்பாளையம், ஆக. 8: வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் நேற்று சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
The post வேலாயுதம்பாளையம் பகுதியில் முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.