×

எஸ்.மாம்பாக்கம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த எஸ்.மாம்பாக்கம் கிராமத்தில் இந்த ஆண்டிற்கான அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர் நதியாகோபி, சுப்பரமணி, மாவட்ட வேளாண் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சத்தியவதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரத்தினமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழிமணி அனைவரையும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, தமிழ்நாடு அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தினை விவசாயிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், நிர்வாகிகள் முரளிதரன், விஷ்ணு, ஜெயபுரி, விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post எஸ்.மாம்பாக்கம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : S. Mambakkam village ,Sundar MLA ,Uthramerur ,Dinakaran ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம்...