×

குன்றத்தூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த வயதான தம்பதி: மகனிடம் போலீசார் விசாரணை

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ஈவிபி டவுனை சேர்ந்தவர் கணேசன் (83). இவர் தனது மனைவி ஜெய்பார்வதி (72) மற்றும் மகன் சக்திவேலுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் சக்திவேல் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டதாகவும், வீட்டில் பெற்றோர் மட்டும் தனியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மீண்டும் மாலை சக்திவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு தந்தை கணேசன் மூக்கு உடைந்து ரத்தம் வடிந்த நிலையிலும், தாய் ஜெய்பார்வதி நாக்கை கடித்த படியும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சக்திவேல் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சக்திவேலின் வீட்டிற்கு இரண்டு சாவிகள் இருப்பதாகவும், காலையில் சக்திவேல் வீட்டை பூட்டிவிட்டு சென்ற நிலையில் மாலையில் வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்ததாகவும், பூட்டிய வீட்டிற்குள் பெற்றோர் இருவரும் இறந்து கிடந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வழக்கை மர்ம சாவு வழக்காக பதிவு செய்து, அவரது மகன் சக்திவேலே பெற்றோரை கொலை செய்தாரா என்ற கோணத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குன்றத்தூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த வயதான தம்பதி: மகனிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kunradur ,Kunrathur ,Ganesan ,EVP Town ,Jaiparvati ,Kunradhur ,Dinakaran ,
× RELATED சென்னையில் திருடு போன டூவீலருக்கு ஒட்டன்சத்திரத்தில் அபராதம் விதிப்பு