×

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி திமுக சார்பில் கலைஞர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை: எம்எல்ஏ பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி திமுக சார்பில், கலைஞர் உருவ படத்திற்கு, செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி திமுக சார்பில், மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நேற்று நடந்தது. இதில், நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் லோகநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜிதேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு, கலைஞரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல், ஊரப்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில், மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கிளாம்பாக்கம் கிளை செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் தினேஷ் மோகனாகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முக்கிய நிர்வாகிகள் மெய்யழகன், தமிழ்ச்செல்வன், ஸ்ரீகாந்த், இன்பசேகர், எழிலரசன், எஸ்.எம்.சேகர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கலைஞரின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், நெடுங்குன்றம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன் தலைமையிலும் ஏராளமான திமுகவினர் கலைஞரின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

The post நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி திமுக சார்பில் கலைஞர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Nandivaram – ,Kuduvanchery municipality ,DMK ,MLA ,Kuduvancheri ,Nandivaram ,Kuduvanchery Municipality DMK ,Chengalpattu Constituency ,Varalakshumimathusudanan ,
× RELATED காட்டூர்-அண்ணா நகர் சாலை ஓரத்தில்...