×

பல்லாவரம் அருகே ஊதுவத்தி கம்பெனியில் தீவிபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

பல்லாவரம்: பம்மல், நாகல்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தாயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது. அங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு தினமும் ஊதுவத்தி தயாரித்து, அவற்றை இருப்பு வைப்பது வழக்கம். மேலும், ஊதுவத்தி தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களும் அதிகளவில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று கம்பெனியில் தொழிலாளர்கள் வழக்கம்போல் ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபோது பொருட்கள் இருப்பு வைத்திருக்கும் அறையில் தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால், அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்து தாம்பரம், மேடவாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் இருந்து 4 வண்டிகளில் வந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்ற பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தனது ஆதரவாளர்களுடன் உடனடியாக களத்தில் இறங்கி, தீயணைப்பு வீரர்களோடு சேர்ந்து உதவினார். தொடர்ந்து தீயணைப்பு வீர்ர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து காரணமாக பம்மல் சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அருகில் உள்ள மக்கள் மூச்சு திணறல் மற்றும் கண்ணெரிச்சலால் அவதியுற்றனர். இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது ஏதேனும் சதிச் செயல் காரணமாகவா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பல்லாவரம் அருகே ஊதுவத்தி கம்பெனியில் தீவிபத்து: பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Uthuvathi ,Pallavaram ,Pammel, Nagalkeni ,Dinakaran ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை