×

கணவரின் காதலியை சுட்டுக் கொன்ற மனைவி; பாலத்தில் இருந்து சடலத்தை வீசினார்

காஜியாபாத்: கணவரின் கள்ளக்காதலியை தனது சகோதரருடன் சேர்ந்து சுட்டுக் கொன்று பாலத்தில் இருந்து சடலத்தை வீசிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில் பண்ட்டி (27), ராக்கி (25) தம்பதியினர் வசித்து வந்தனர். பண்ட்டி ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். அதில் வேலை பார்த்து வந்த ராகினி (21) என்பவருடன் பண்ட்டிக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ராக்கிக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்து இருந்த ராக்கி, தனது கணவரிடம் அந்தப் பெண்ணிடம் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் தனது மனைவியின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து காதலி ராகினியிடம் பழகி வந்தார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை தனது சகோதரர் அமித்திடம் ராக்கி தெரிவித்தார்.

அவரது ஆலோசனையின் பேரில், ராகினியை கொன்றுவிட முடிவு செய்தனர். அதற்காக ராகினியை அவர்களது வீட்டிற்கு கடந்த 2ம் தேதி அழைத்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு காரில் ராகினியை கடத்திச் சென்றனர். ஹிண்டன் ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்ற அவர்கள், ராகினியை சுட்டுக் கொன்று, சடலத்தை பாலத்தில் இருந்து ஆற்றில் வீசிவிட்டு தப்பினர். ராகினியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது நடந்த சம்பவங்கள் அம்பலமானது. இது தொடர்பாக ராக்கி, அவரது சகோதரர் அமித், அவரது நண்பர்கள் கரண், அங்கூர் உள்ளிட்ட 5 பேர் கைது ெசய்யப்பட்டனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ராக்கியின் கணவர் பண்ட்டியையும் போலீசார் கைது செய்தனர்.

The post கணவரின் காதலியை சுட்டுக் கொன்ற மனைவி; பாலத்தில் இருந்து சடலத்தை வீசினார் appeared first on Dinakaran.

Tags : Ghaziabad ,Dinakaran ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...