×

ஜனநாயகம், நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது… மக்களவை நடவடிக்கையில் ராகுல் காந்தி மீண்டும் பங்கேற்றது மகிழ்ச்சி: ப.சிதம்பரம் உற்சாகம்

டெல்லி: மக்களவை நடவடிக்கைகளில் ராகுல் காந்தி மீண்டும் பங்கேற்றது மகிழ்ச்சியை தருவதாக I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை உரிய நேரத்தில் ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கியதை வரவேற்பதாக கூறி உள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ராகுல் காந்தி பங்கேற்பது மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்துள்ளார். ராகுல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஜனநாயக மற்றும் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை அதிகரித்து உள்ளதாக சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற ராகுல் காந்திக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி.யும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்புள் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.பதவி கிடைத்திருப்பதை I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ராகுல் காந்தி விவகாரத்தில் மக்களவை சபாநாயகர் உரிய நேரத்தில் முடிவு எடுத்து இருப்பதாகவும், I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

The post ஜனநாயகம், நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது… மக்களவை நடவடிக்கையில் ராகுல் காந்தி மீண்டும் பங்கேற்றது மகிழ்ச்சி: ப.சிதம்பரம் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Chitambaram ,Delhi ,Raqul Gandhi ,I.N.D.I.A. Coalition ,Ragul ,p. ,Sidambaram ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...