×

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை:காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டுமென்று இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இளைய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இதர பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Pannerselvam ,Chennai ,Tamil Nadu Government Personnel ,Bannerselvam ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...