×

புதுகை புத்தக திருவிழாவில் மாணவர்கள் பிரமிடு செய்து காட்டி அசத்தல்

கந்தர்வகோட்டை,ஆக.7: புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்கள் பிரமிடு செய்து காட்டி அசத்தினர். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக்கூடிய 6வது புத்தக திருவிழாவில் அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பிரமிடு செய்து கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். புத்தகத் திருவிழாவில் கந்தரவகோட்டை ஒன்றியத்தின் சார்பில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு புத்தகத் திருவிழாவில் மஞ்சப்பேட்டை, அக்கச்சிபட்டி, கந்தர்வகோட்டை, சுந்தம்பட்டி, ஆண்டிகுளப்பம்பட்டி, வெள்ளாள விடுதி, துவார் உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து மாலை நேரத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கந்தரவக்கோட்டை ஒன்றியத்தின் சார்பில் கொத்தகப்பட்டி நடுநிலைப்பள்ளியும், அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியும், இல்லம் தேடிக் கல்வி மையமும் இணைந்து கலை நிகழ்ச்சிகான ஏற்பாடுகள் செய்திருந்தன. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி, கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை ஆசிரியர்கள் ரகமதுல்லா, சிந்தியா, நிவின் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post புதுகை புத்தக திருவிழாவில் மாணவர்கள் பிரமிடு செய்து காட்டி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Pudukai book ,Gandharvakottai ,Pudukottai book festival ,Pudukottai ,Tamil Nadu ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...