×

வற்றி வரும் கண்டமனூர் கண்மாய்

 

வருசநாடு, ஆக. 7: வருசநாடு கண்டமனூர் கிராமத்தில் பரமசிவன் கோவில் கண்மாய் உள்ளது. கடந்தாண்டு இப்பகுதியில் பெய்த கனமழையால் கண்மாயில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை இல்லாததால் கண்மாயில் தொடர்ந்து நீர் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்படுவதாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே மழைக் காலங்களில் கிடைக்கும் நீரைத் தேக்குவதற்கு, கண்மாயினை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் புதுக்குளம் கண்மாயை முறையாக பராமரித்து, தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வற்றி வரும் கண்டமனூர் கண்மாய் appeared first on Dinakaran.

Tags : Kandamanur ,Kanmai ,Varusanadu ,Paramasivan ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...