பொன்னேரி, ஆக. 7: பொன்னேரி அடுத்த ஆரணி ஆற்றங்கரை அணைக்கட்டு ஆலாடு பகுதி உள்ளது. இங்கு, சுமார் மதியம் 2 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆற்றங்கரையில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றங்கரையில் சிலை இருப்பதை பார்த்த சிறுவர்கள் ஊர் மக்களிடம் கூறியுள்ளார்கள். அங்கு வந்த கிராம மக்கள் சுமார் ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான மூகாம்பிகை சிலையை பார்த்து பரவசப்பட்டனர். உடனே, எடுத்து சென்று அங்குள்ள நெல்லூர் அம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்தனர்.
இதுகுறித்து, பொன்னேரி தாசில்தார் செல்வகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரும், பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, எஸ்ஐ. வெங்கடேசன், பொன்னேரி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா, கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்ட மூகாம்பிகை சிலையை மீட்டு பொன்னேரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
The post பொன்னேரி அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.