சிட்னி: மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் விளையாட நெதர்லாந்து தகுதி பெற்றது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்ரிக்கா – நெதர்லாந்து அணிகள் நேற்று மோதின. 9வது நிமிடத்தில் ஜில் ரூர்ட் அபாரமாக கோல் அடிக்க, நெதர்லாந்து முன்னிலை பெற்றது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணிக்கு 68வது நிமிடத்தில் லினெத் பீரன்ஸ்டெய்ன் கோல் போட்டு அசத்தினார்.
பதில் கோல் அடிக்க தென் ஆப்ரிக்க வீராங்கனைகள் 14 முறை முயற்சித்தும், அதில் ஒன்று கூட கோலாக மாறவில்லை. அதே சமயம், இலக்கு நோக்கி 12 ஷாட் அடித்த நெதர்லாந்து, அதில் 2 தடவை வெற்றியும் பெற்றது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. ஆக. 11ல் நடைபெறும் முதல் காலிறுதியில் நெதர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
The post மகளிர் உலக கோப்பை கால்பந்து காலிறுதியில் நெதர்லாந்து appeared first on Dinakaran.