×

முறுக்கு வியாபாரி வெட்டி கொலை

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (43). இவரது மனைவி செல்வி. தம்பதிக்கு இசக்கிராஜா (15), ஆறுமுகம் என்ற சங்கர் (13), சுடலைமுத்து (13) என 3 மகன்கள் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு கடை நடத்திவந்த செந்தில்நாதன், நேற்று மாலை வழக்கம்போல் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் மூவர், செந்தில்நாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செந்தில்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்ததும் போலீசார், செந்தில்நாதனின் உடலை கைப்பற்றி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

The post முறுக்கு வியாபாரி வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Srivaikundam ,Sendilnathan ,Pudukudi ,Thuthukudi District ,ms. ,Isakiraja ,Dinakaran ,
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்