×

ரஷ்ய கப்பல் மீது டிரோன் தாக்குதல் உக்ரைன் தொடர்ந்து பதிலடி

கிவ்: உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடெசா துறைமுகம் மீது ரஷ்யா ஏவுகணை, ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் பதிலடி ெகாடுத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கிரிமியா துறைமுகம் அருகே கெர்ச் ஜலசந்தியில் ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றி செல்லும் கப்பல் சென்றுள்ளது. இதன் மீது உக்ரைனின் ஆளில்லா கடல்வழி டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதனால் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் ரஷ்ய எரிபொருள் டேங்கரில் சென்ற 11 பேர் காமடைந்தனர். இருதினங்களுக்கு முன் ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகமான நோவோரோஸிஸ்க் துறைமுகம் மீது உக்ரைனின் ஆளில்லா சிறுகப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷ்யாவுக்கு சொந்தமான ஒலெனெகோர்ஸ்கி கார்னியாக் என்ற கப்பல் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

The post ரஷ்ய கப்பல் மீது டிரோன் தாக்குதல் உக்ரைன் தொடர்ந்து பதிலடி appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Odessa ,Dinakaran ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி